நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.(3)
குறுந்தொகையில் மூன்றாவது பாடல். தேவகுலத்தார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் தலைவன். ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.அப்பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள் என்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும். இப்படியே களவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கல்யாணம் தான் எப்போது?கவலை தோழிக்கு! தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தோழி பார்க்கிறாள் அவனை ! இதுதான் சமயம் என்று தலைவனைப் பழித்துப் பேசினாள் தோழி!பொறுப்பாளா தலைவி?
தலைவனோடு தனக்குள்ள உறவின் உயர்வைச் சொல்கிறாள் தோழியிடம்! ”இந்த நிலமும், வானும், நீரும் எப்பொழுதும் இங்கே இருந்தாலும் உரிய நேரத்தில் இயைந்து தானே இவ்வுலகத்திற்கு பயனினை அளிக்கின்றன. அதைப் போல எங்கள் நட்பும் திருமணம் செய்து கொண்டு வாழும் நாளில் நன்மையைக் கொடுக்கும் . அதுவரை பொறுத்திரு தோழி! ” என்று இயற்கையின் மூலம் வாழ்க்கையின் இயல்புணர்த்தி புரிய வைக்கிறாள் தோழிக்கு! மறைந்து நிற்கும் மணவாளன் செவியிலும் மங்கையின் அன்புக் குரல் கேட்கத்தானே செய்யும்? அதுவே அவர்கள் திருமணம் விரைவில் நிறைவேற வழி வகுக்குமல்லவா
கருத்துரை
” கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை, வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கிறது. இத்தனை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது”
பாடலின் பொருள் இது மட்டும் தானா? ஆயிரம் உட்பொருளை உள்ளடக்கிப் படைத்த அன்புக் கவிதை இது! எப்படி வண்டு குறிஞ்சிப் பூக்களில் தேனெடுத்து தேனடையாக்குகின்றதோ அப்படித்தான் குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பும் அன்பால் பெருகி இல்லற வாழ்வாய் சிறப்புறும் என்று தலைவி சொல்லும் முறை தேனினும் இனிது.
தலைவனோடு தான் கொண்ட நட்பினை இத்தன்மை என்று அளந்து கூற முடியாது என்பதைத் தோழிக்குச் சொல்லும் விதம்… எங்கே கற்றாள் இந்தத் தமிழின் ஆட்சியை! என்று சொல்லத் தோன்றுகிறது. நிலம், வானம் , நீர் மூன்றும் வெவ்வேறானவை தான். ஆனால் அவை இணையும் போது தான் உலகிற்குப் பயனளிக்கும் என்பது எனக்கும் தெரியும் . என் தலைவனுக்கும் தெரியும். எங்கள் நட்பும் இணைந்த நட்பு. இதில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பயன் பெறுதல் இல்லை! என்ற உட்பொருளும் தோன்ற நிலம், வான், நீரைக் குறிப்பிட்டிருத்தலை என்னவென்று புகல்வது?
சரி, நிலத்தை விடப் பெரியது.வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது என்று பெரிது, உயர்ந்தது, ஆழமானது என்று குறிப்பிடுதலிலும் பொருள் உண்டு.” இவை எல்லாம் கூட ஒரு காலத்தில் வளம் குன்றலாம்.வானம் பொய்க்கலாம். நீரின் அளவு குறையலாம் . ஆனால், எம் நட்பு அப்படிப்பட்டதன்று. எப்பொழுதும் ஒரே நிலையில் சிறப்புடன் திகழ்வது ” என்பதை இயற்கையைக் காட்டி ”இயற்கையின் இனிது எம் நட்பு ” காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மை நமக்கே இனித்ததென்றால் காதலனுக்கு…?
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.(3)
குறுந்தொகையில் மூன்றாவது பாடல். தேவகுலத்தார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் தலைவன். ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.அப்பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள் என்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும். இப்படியே களவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கல்யாணம் தான் எப்போது?கவலை தோழிக்கு! தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தோழி பார்க்கிறாள் அவனை ! இதுதான் சமயம் என்று தலைவனைப் பழித்துப் பேசினாள் தோழி!பொறுப்பாளா தலைவி?
தலைவனோடு தனக்குள்ள உறவின் உயர்வைச் சொல்கிறாள் தோழியிடம்! ”இந்த நிலமும், வானும், நீரும் எப்பொழுதும் இங்கே இருந்தாலும் உரிய நேரத்தில் இயைந்து தானே இவ்வுலகத்திற்கு பயனினை அளிக்கின்றன. அதைப் போல எங்கள் நட்பும் திருமணம் செய்து கொண்டு வாழும் நாளில் நன்மையைக் கொடுக்கும் . அதுவரை பொறுத்திரு தோழி! ” என்று இயற்கையின் மூலம் வாழ்க்கையின் இயல்புணர்த்தி புரிய வைக்கிறாள் தோழிக்கு! மறைந்து நிற்கும் மணவாளன் செவியிலும் மங்கையின் அன்புக் குரல் கேட்கத்தானே செய்யும்? அதுவே அவர்கள் திருமணம் விரைவில் நிறைவேற வழி வகுக்குமல்லவா
கருத்துரை
” கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை, வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கிறது. இத்தனை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது”
பாடலின் பொருள் இது மட்டும் தானா? ஆயிரம் உட்பொருளை உள்ளடக்கிப் படைத்த அன்புக் கவிதை இது! எப்படி வண்டு குறிஞ்சிப் பூக்களில் தேனெடுத்து தேனடையாக்குகின்றதோ அப்படித்தான் குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பும் அன்பால் பெருகி இல்லற வாழ்வாய் சிறப்புறும் என்று தலைவி சொல்லும் முறை தேனினும் இனிது.
தலைவனோடு தான் கொண்ட நட்பினை இத்தன்மை என்று அளந்து கூற முடியாது என்பதைத் தோழிக்குச் சொல்லும் விதம்… எங்கே கற்றாள் இந்தத் தமிழின் ஆட்சியை! என்று சொல்லத் தோன்றுகிறது. நிலம், வானம் , நீர் மூன்றும் வெவ்வேறானவை தான். ஆனால் அவை இணையும் போது தான் உலகிற்குப் பயனளிக்கும் என்பது எனக்கும் தெரியும் . என் தலைவனுக்கும் தெரியும். எங்கள் நட்பும் இணைந்த நட்பு. இதில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பயன் பெறுதல் இல்லை! என்ற உட்பொருளும் தோன்ற நிலம், வான், நீரைக் குறிப்பிட்டிருத்தலை என்னவென்று புகல்வது?
சரி, நிலத்தை விடப் பெரியது.வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது என்று பெரிது, உயர்ந்தது, ஆழமானது என்று குறிப்பிடுதலிலும் பொருள் உண்டு.” இவை எல்லாம் கூட ஒரு காலத்தில் வளம் குன்றலாம்.வானம் பொய்க்கலாம். நீரின் அளவு குறையலாம் . ஆனால், எம் நட்பு அப்படிப்பட்டதன்று. எப்பொழுதும் ஒரே நிலையில் சிறப்புடன் திகழ்வது ” என்பதை இயற்கையைக் காட்டி ”இயற்கையின் இனிது எம் நட்பு ” காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மை நமக்கே இனித்ததென்றால் காதலனுக்கு…?
No comments:
Post a Comment